Showing posts with label தமிழ் - பாலகாண்டம். Show all posts
Showing posts with label தமிழ் - பாலகாண்டம். Show all posts

Friday, May 11, 2018

பாலகாண்டம் சர்க்கம் 1 ஸ்லோகம் 5&6

பாலகாண்டம் சர்க்கம் 1 ஸ்லோகம் #5

ஏததிச்சாம்யஹம் ஸ்ரோதும் பரம் கௌதூஹலம் ஹி மே |
மஹர்ஷே த்வம் சமர்த்தோSபி ஞாதுமேவம்விதம் நரம் ||

பொருள்: 

ரிஷிகளில் சிறந்தவரான நாரதரே! இத்தகைய நற்குணங்களைக் கொண்டவரான மனிதரைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு எனக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. தாங்கள் அந்த மனிதரைக் குறித்து முழுவதுமாக அறிந்திருக்கிறீர்கள். தயவு செய்து எனக்கு அவரைப் பற்றி தெரிவியுங்கள்.

விளக்கம்:

ஹே மஹர்ஷே = முனிவர்களில் சிறந்தவரான நாரதரே
த்வம் = தாங்கள்
ஏவம் விதம் நரம் = இத்தகைய நற்குணங்களைக் கொண்டவரான சிறந்தவரை
ஞாதும் = தெரிவியுங்கள்
சமர்த்தோSஸி = முழுவதுமாக அறிந்திருக்கிறீர்கள்.
அஹம் = நான்
ஏதத் = இந்த சிறந்த மனிதரின் குணங்களின் சிறப்புகளை
ஸ்ரோதும் = கேட்பதற்கு
இச்சாமி = விருப்பப்படுகிறேன். 
ஹி = ஏனென்றால்
மே = எனக்கு
பரம் கௌதூஹலம் = மிகவும் மகிழ்ச்சியடைந்திருக்கிறேன். 

(ஸ்லோகத்தின் முதற்பாதியில் காவிய அலங்காரத்தையும், பிற்பாதியின் காவியலிங்க அலங்காரத்தையும் பயன்படுத்தியிருக்கிறார் என்று அறியவேண்டும்).

பாலகாண்டம் சர்க்கம் 1 ஸ்லோகம் #6

ஸ்ருத்வா சைதத் த்ரிலோகஞே வால்மீகேர்னாரதோ வச: |
ஸ்ரூயதாமிதி சாமந்த்ர்ய ப்ரக்ருஷ்டோ வாக்யமப்ரவீத் ||

பொருள்:

மூன்று உலகங்களின் ஞானத்தையும் பெற்றிருக்கும் நாரதர், வால்மிகி ரிஷியின் வார்த்தைகளைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அவரது கேள்விகளை பாராட்டி, பதில் சொல்கிறேன் கேள் என்று சொல்லி, வால்மிகியை தன் எதிரில் அமர்த்தி, பதில் அளிக்கத் துவங்கினார். 

விளக்கம்:

த்ரிலோகக்ஞ = மூன்று உலகங்களையும் அறிந்தவர்
நாரத: = நாரத மகிரிஷி
வால்மிகே: = வால்மிகியின்
ஏதத் = இந்த கேள்வியை
ச = மனதிற்குள் இருந்ததையும்
ஸ்ருத்வா = கேட்டு அறிந்து 
ப்ரஹ்ருஷ்ட: = மிகவும் மகிழ்ச்சியடைந்து
வச: ஸ்ரூயதாம் = என் பேச்சினைக் கேளுங்கள்
இதி = இப்படி
ஆமந்த்ர்ய = எதிரில் அமர்த்தி
வாக்யம் = பதில் அளிக்கும் விதமாக
அப்ரவீத் = தெளிவாகக் கூறினார்

சிறப்புக் கருத்து:

’தத்விக்ஞானார்த்தம் ஸ குருமேவாபி கச்சேத்’ என்பதைப்போல, ஞானத்தை அடைவதற்காக குருவைத் தேடி சிஷ்யன் போகவேண்டும் என்பது அதர்வண உபநிஷத்தில் வரும் வாக்கியம். ஆனால் இங்கு குருகளான நாரதரே சிஷ்யரான வால்மிகியைத் தேடி வந்திருக்கிறார். சிஷ்யனுக்கு ஞானோபதேசம் பெறும் காலம் கனிந்து வந்தால், குரு தானே வந்து, உபதேசிப்பார் என்னும் தத்வத்தை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

’நாஸம்வத்ஸரவாசீனே ப்ரப்ரூயாத்’ - ஓராண்டு காலம் குருகளின் சேவை செய்யாதவருக்கு, எந்த உபதேசமும் செய்யக்கூடாது என்ற சொலவடை இருப்பதால், நாரதர் வால்மிகிக்கு எப்படி உடனடியாக உபதேசம் செய்தார் என்ற கேள்வி எழக்கூடும். மூத்த மகனுக்கு மட்டும் இந்த விதியிலிருந்து விலக்கு உண்டு. அதாவது, மூத்த மகன் உபதேசம் பெறுவதற்கு தனது குருவிற்கு ஓராண்டு காலம் சேவை செய்யவேண்டிய அவசியமில்லை. நாரதருக்கு வால்மிகி ரிஷிகள் மூத்த மகனைப் போலவே இருக்கிறார். நாரதருக்கு ப்ருகு ரிஷிகள் சகோதரர். ப்ருகு ரிஷிகளின் மகன் வால்மிகி. ஆக, நாரதருக்கும் வால்மிகி மூத்த மகனாகவே கருதப்படுகிறார். ஆகவே, சேவை இல்லாவிட்டாலும், பாசத்தின் காரணமாக உபதேசம் செய்தார். 

’த்ரிலோகக்ஞ:’ - பூலோக, புவர்லோக, சுவர்லோக என்ற இந்த மூன்று உலகங்களையும் முழுமையாக அறிந்தவர் - அல்லது பத்தலோக, நித்யலோக, நித்யமுக்திலோக என்ற இந்த மூன்று உலகங்களையும் முழுமையாக அறிந்தவர். 

’ஸ்ருத்வா ச’ - வால்மிகியின் பேச்சினைக் கேட்டு என்று பொருள். ’ச’ என்று சொல்வதனால், அவர் கேட்காத / கேட்க நினைத்த கேள்விகளையும்கூட தாமே நினைத்து, அவற்றிற்கும் சரியான பதில் அளித்தார் என்று அறியவேண்டும். 

’ப்ரஹ்ருஷ்ட:’ - சம்பூர்ண ராமாயணத்தை பூலோகத்தில் பரப்புமாறு நாரதரிடம் பிரம்மதேவர் ஆணையிட்டார். அதை வால்மிகிக்கு உபதேசம் செய்வதற்காக நாரதர் அவரது ஆசிரமத்திற்கு வந்தார். வால்மிகியும் அதைப் பற்றியே கேள்விகளைக் கேட்டதால், நாரதர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். 

Thursday, May 10, 2018

பாலகாண்டம் சர்க்கம் 1 ஸ்லோகம் 3&4

3வது ஸ்லோகம்:

சாரித்ரேண ச கோ யுக்த: சர்வபூதேஷு கோ ஹித: |
வித்வான் க: க: சமர்தஸ்ச கஸ்ஷ்ருகப்ரியதர்ஷன: ||

பொருள்:

சிறந்த குலவழக்கங்கள் உள்ளவர் யார்? அனைத்து வித விலங்குகளிடமும் யார் மிகவும் அன்பு காட்டுகிறார்? ஆத்ம மற்றும் அனாத்ம தத்வத்தை முழுமையாக அறிந்தவர் யார்? ஐஹிகத்திலும் ஆயுஷ்யகத்திலும் அனைத்து விதங்களிலும் மகிழ்ச்சியை உண்டாக்குபவர் யார்?

விளக்கம்:

சாரித்ரேண - சிறந்த வழக்கமுள்ள
யுக்த: - பின்பற்றுபவர்
க: - யார்?
சர்வபூதேஷு - அனைத்து வித விலங்குகளின் நடுவில்
க: - எந்த ஆண்?
ஹித: - அனைத்து விதங்களிலும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்
க: - யார்?
வித்வான் - ஆத்ம மற்றும் அனாத்மகத்தை முழுவதுமாக அறிந்தவர்
சமர்தஸ்ச - யாராலும் செய்யமுடியாத செயல்களை செய்துமுடிப்பதில் வல்லவர்
க: - யார்?
ஏகப்ரியதர்சன: - எப்போது பார்த்தாலும் அன்பினைப் பொழிபவர்
க: - யார்?

சிறப்புக் கருத்து:

ஆத்ம-தத்வம் மற்றும் அனாத்ம-தத்வம் இரண்டையும் முழுமையாக அறிந்தவர் வித்வான் என்று அழைக்கப்படுகிறார். க: ஹித: = ‘க: சமர்தஸ்ச’ - யாராலும் செய்து முடிக்கமுடியாத விஷயத்தை செய்பவர் ’சமர்த்த’ என்று அழைக்கப்படுகிறார். ‘அகடனபடு’ என்றும் அழைக்கலாம். 

‘கஸ்சைகப்ரியதர்சன:’ = உலகத்தில் இவரைப் போல மற்றவர்களுக்கு அன்பு காட்டுபவர் வேறு யாருமில்லை. ஒரு மனிதரைப் பார்த்தால், ஒரு முறை அன்பானவராகத் தெரிவார். மற்றொரு முறை அன்பு இல்லாதவராகத் தெரிவார். அத்தகையவரை ஒரு முறை பார்த்தால், மகிழ்ச்சி வருகிறது. வேறொரு முறை பார்த்தால் துக்கம் வருகிறது. ஆனால், இவன் அப்படியில்லை. ‘க்‌ஷணே க்‌ஷணே யன்னவதாமுப்யைதி ததேவ ரூபம் ரமணீயதாயா:’ ஒவ்வொரு கணமும் புதிதுபுதிதாக ரூபம் காணப்பட்டால் அதை ரமணீய என்று அழைக்கின்றனர். இத்தகைய அழகானவர் யார்? - என்று கேட்கிறார்.

4வது ஸ்லோகம்:

ஆத்மவான் கோ ஜிதக்ரோதோ த்யுதிமான் கோSநசூயக: |
கஸ்ய பிப்யதி தேவாஸ்ச ஜாதரோஷஸ்ய சம்யுகே ||

பொருள்:

அனைத்து இந்திரியங்களையும் தனது வசத்தில் வைத்திருப்பவர் யார்? கோபத்தையும் தன் வசத்தில் வைத்திருப்பவர் யார்? அனைத்து உலகமும் பார்த்து வியக்கும்படியான தேக-காந்தியை வைத்திருப்பவர் யார்? மற்றவர்களிடத்தில் இருக்கும் நற்குணங்களைக் கண்டு பொறாமை கொள்ளாதவர் யார்? கெட்ட விஷயங்களுக்காக யாருக்குக் கோபம் வந்தால், அசுரர்கள் மட்டுமல்ல தேவர்களும் பயப்படுவர்?

சிறப்புக் கருத்து:

ஆத்மா என்னும் சொல்லிற்கு உடல் மற்றும் இந்திரியங்கள் என்று பொருள். இவற்றை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருப்பவர் யார்? ’ஆத்மா ஜீவே த்ருதௌ ஸ்வபாவே பரமாத்மனி’ என்று சொல்வதைப்போல ஆத்மவான் என்றால் தைரியம் மிக்கவன் என்று பொருள். அந்த தைரியத்தைப் பெற்றவன் யார் என்பது அபிப்பிராயம். 

’ஜிதக்ரோத:’ - கோபத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருப்பவரை ஜிதக்ரோத என்றும் அழைக்கலாம். தவறு செய்தவர்களின் விஷயங்களிலும், விரோதத்தைக் காட்டாமல், செய்த தவறுக்கு மட்டும் தண்டனை கொடுப்பவர் ஜிதக்ரோதன் எனப்படுகிறார். 

’த்யுதிமான் க:’ - உடலினால் மற்றும் மனதினால், சுத்தமான ஒளியை உடையவன் யாரோ, உலகம் முழுக்க இருப்பவர்கள் யாருடைய உடலின் ஒளியைப் பார்த்து வியப்படைகிறார்களோ, அவர் த்யுதிமான் எனப்படுகிறார்.

’க: அனசூயக:’ - நற்குணங்களைக் கொண்டவரிடத்தில் விரோதம் பாராட்டினால், அதை பொறாமை என்கிறார்கள். மற்றவர்களிடத்தில் இருக்கும் கல்வி, செல்வம், தவம் முதலானவைகளுக்கு அவரின் குணங்களை அலசி ஆராய்ந்து அதில் குறை கண்டுபிடித்து, அவரை திட்டுவதே பொறாமை என அழைக்கப்படுகிறது. இத்தகைய தோஷங்கள் சிறிதுகூட இல்லாதவர் யார் என்று கேட்பதே இந்தக் கேள்வியின் சாரம். 

’கஸ்ய பிப்யதி தேவாஸ்ச ஜாததோஷஸ்ய சம்யுகே’ - கஸ்ய = யாரைப் பார்த்தால் ; ஜாததோஷஸ்ய = கெட்ட விஷயங்களில் கோபப்படும்போது ; தேவாஸ்ச = தேவர்கள் மற்றும் அசுரர்கள் ; பிப்யதி = பயப்படுவார்கள்?

’பேத்ரார்த்தானாம் பயஹேதூனாம்’ என்னும் இலக்கண விதிப்படி, ‘கிம்’ என்னும் சொல்லின்மேல் ஐந்தாம் வேற்றுமை உருபு வரும்போது அது ‘கஸ்ய’ என்றாகிறது. ஆகையால் இங்கு மட்டும் க: என்றும் கஸ்ய என்றும் பயன்படுத்தியிருக்கிறார். இந்த மூன்று ஸ்லோகங்களில் மிகவும் ஆழமான விஷயத்தை விளக்கியிருப்பதால், அதற்கு ’உதாத்தா அலங்காரத்தை’ கவி பயன்படுத்தியிருக்கிறார். 

Tuesday, May 8, 2018

பால காண்டம். சர்க்கம் 1 - ஸ்லோகம் #2

பால காண்டம். ஸ்லோகம் #2

கோன்வஸ்மின் ஸாம்ப்ரதம் லோகே குணவான் கஷ்ச வீர்யவான் |
தர்மஞஸ்ச க்ருதஞஸ்ச சத்யவாக்யே த்ருடவ்ரத: ||

பொருள்: 
இந்த உலகத்தில் சிறந்தவர் எனக் கருதப்படுபவர் யார்? அனைத்துவித நற்குணங்களையும் கொண்டவர் யார்? அனைத்து ஆயுதப் பயிற்சிகளும் பெற்று, எதிரிகளை வெல்லக்கூடிய வீரன் யார்? தர்மத்தை முழுமையாக அறிந்தவன் யார்? பெற்ற உதவிகளை நினைப்பவன், தத்வஞானி, ஆபத்து காலங்களிலும் சத்தியத்தைக் காப்பாற்றுபவன் யார்?

விளக்கம்:

அஸ்மின் லோகே - இந்த பூலோகத்தில்
சாம்பிரதம் - இந்த காலத்தில்
குணவான் - அனைத்து நற்குணங்களையும் கொண்டிருக்கும் ஒருவர்
க: - யார்?
வீர்யவான் - அனைத்து ஆயுதப் பயிற்சிகளையும் கற்று, எதிரிகளை வெல்லக்கூடிய வீரன்
க: - யார்?
தர்மஞஸ்ச - ஸ்ருதி ஸ்ம்ருதிகளில் சொல்லியவாறு அனைத்து வித தர்மங்களை அறிந்தவர் (யார்?)
க்ருதஞஸ்ச - தனக்கு செய்த அனைத்து தொந்தரவுகளையும் மறந்து, செய்த ஒரே ஒரு உதவியை நினைத்துப் பார்க்கும் நன்றியுள்ள ஒருவர் (யார்?)
சத்யவாக்ய: - எத்தகைய கஷ்டமான காலங்களிலும் உண்மையையே பேசுபவர் (யார்?)
த்ருடவ்ரத: - ஆபத்து காலங்களிலும் தீர்மானித்த தர்மத்தை விடாமல் நிலைநாட்டுபவர் (யார்?)

சிறப்புக் கருத்து:

தமது ஆசிரமத்திற்கு வந்த நாரதரிடம், வால்மிகி ரிஷி மிகவும் மரியாதையுடன், தமது கேள்விகளை முன்னெடுத்து வைக்கிறார். அடுத்த மூன்று ஸ்லோகங்களில் நாரதரிடம் வால்மிகி கேட்ட கேள்விகளைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. 

கோனு அஸ்மின் - என்னும் அமரகோச வாக்கியத்தின்படி ‘னு’ என்னும் சொல் கேள்வியைக் குறிக்கிறது. அஸ்மின் என்னும் சொல்லிற்கு பூலோகத்தில் என்று பொருள்.

சாம்ப்ரதம் - என்னும் சொல்லிற்கு நிகழ்காலம் என்று பொருள். வேறு உலகங்களில், அனைத்து நற்குணங்களுடன் கூடியவன் விஷ்ணு என்று பெயர் பெற்றிருக்கிறார். அதைப் பற்றி கேட்பது வால்மிகியின் அபிப்ராயம் இல்லை. பூலோகத்தில் சிறந்தவர் யார் என்று கேட்பதே வால்மிகியின் நோக்கமானதால், ‘அஸ்மின் லோகே’ என்று கேட்கிறார். மேலும், பூலோகத்திலும் வேறு காலங்களில், நரசிம்ம, வாமன, பரசுராம ஆகிய ஸ்ரீஹரியின் ரூபங்கள் சிறந்தவையாக இருந்தன என்ற விஷயம் வால்மிகி ரிஷிக்கு தெரிந்திருந்தது. ஆனால் அந்த காலத்தில் யார் சிறந்தவர்? என்று கேட்பது வால்மிகியின் நோக்கமாக இருந்ததால் சாம்ப்ரதம் என்ற சொல்லை பயன்படுத்தினார். 

குணவான் - சமுதாயத்தைப் பற்றிக் கேட்டு, பின்னர் அரசரிடம் கண்டிப்பாக இருக்கவேண்டிய குணங்களைப் பற்றி பின்னர் கேட்கிறார். 

‘கஸ்ச வீர்யவான்’ - க: என்னும் சொல்லை திரும்பத்திரும்ப பயன்படுத்தியிருப்பதால், தமக்கு கேள்வி கேட்பதில் இருக்கும் விருப்பத்தை தெரியப்படுத்துகிறார். ஆகையால், க: என்னும் இந்த  சொல்லையே ஒவ்வொரு குணங்களின் பின்னும் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும். 

உலகத்தில், ஒரு மனிதனிடத்தில் குணங்கள் வந்து சேர்ந்தால் அவனிடம் மாற்றம் உண்டாகிறது. ஆனால் இங்கு மனிதனின் சம்பந்தத்தாலேயே குணங்களில் மாற்றம் உண்டாகியிருக்கிறது. இதைத் தெரியப்படுத்துவதற்காக, குணமுள்ள மனிதனை முதலில் கேட்டு, பின் குணங்களைப் பற்றி சொல்கிறார். 

ஒருவரது மனம் களங்கப்படும் சந்தர்ப்பங்கள் நிறைய வந்தாலும், அவரது மனம் களங்கப்படாமல் இருந்தால் அவர் வீரர் எனப்படுவார். இத்தகைய வீரர் யார்? அல்லது பல ஆயுதங்களை அடைந்து எதிரிகளை பந்தாடும் திறனுள்ள வீரர் என்கிறார். இத்தகைய வீரம் உள்ளவர் யார்?

தர்மஞஸ்ச - ஸ்ருதி ஸ்ம்ருதிகளில் சொல்லப்பட்ட அனைத்து வகை தர்மங்களையும் அறிந்தவர் யார்? அல்லது அலௌகிகமான புகழைப் பற்றி, சாதாரண மற்றும் விசேஷ ஞானத்தைப் பெற்றவர் யார்? ச என்னும் சொல்லை, பிறகு வருபவற்றுடன் சேர்த்துச் சொல்லவேண்டும். அதர்மத்தைப் பற்றி முழுமையாகத் தெரிந்தவர் யார்?

க்ருதஞஸ்ச - செய்த உதவிகள் மிகக் குறைவாகவே இருந்தாலும், சந்தர்ப்பம் வரும்போது அதை நினைவு படுத்திக்கொள்பவர் யார்? இங்கிருக்கும் ‘ச’ சொல்லையும் பிறகு வருபவற்றுடன் சேர்த்துச் சொன்னால், செய்த பிரச்னைகளை நினைவில் வைத்துக் கொள்பவர் யார்? என்றும் வரும். 

சத்யவாக்ய: - ஆபத்தான நேரங்களிலும் தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக உண்மையைப் பேசி, பொய் சொல்லாதவர் யார்? ராமாயணத்திலேயே பின்னர் இவ்வாறு வருகிறது. ‘அன்ருதம் நோக்தபூர்வம் மே ந ச வக்‌ஷ்யே கதாசன’ - இதுவரை பொய் சொன்னதில்லை. இனியும் சொல்லப் போவதில்லை. 

ந ஸ்மரத்யபகாராணாம் ஷதமப்யாத்மவத்தயா |
கதம்சிதுபகாரேண க்ருதேன்யைகேன துஷ்யதி ||

ஆத்மவத்தயா என்றால் தனக்கு ஆபத்து வரக்கூடிய நேரங்களில் என்றும் ஆத்ம என்றால் மனம் என்று பொருள் வருவதால் ஆத்மவான் என்றால் மனது உள்ளவன் என்று பொருள். எத்தகைய மனது?

தனக்கு 100 பிரச்னைகள் செய்திருந்தாலும் அதை நினைக்காமல், எப்போதோ செய்த ஒரே ஒரு உதவியை மட்டும் நினைவில் வைத்துக்கொண்டு மகிழ்ச்சியடையும் நல்ல மனதுடையவன். 

த்ருடவ்ரத: - நற்காரியங்களை செய்து முடிப்பேன் என்று சொல்பவர்களில் சிறந்தவர் யார்? தந்தை சொல்லை மீறாதவர், ஏகபத்னி விரதம் ஆகியவற்றை பின்பற்றுபவர் யார்? மிகக் கடினமான விரதங்களை செய்து முடிப்பவர் யார் என்று கேட்கிறார். பின்னர் வரும் ராமாயண ஸ்லோகமும் இங்கே நினைத்துக் கொள்ளலாம்.

அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யம் த்வாம் வா சீதே சலக்‌ஷ்மணாம் |
நஹி ப்ரதிஞாம் சம்ஸ்ருத்ய ப்ராம்மணேப்யோ விசேஷத: ||


Friday, May 4, 2018

பாலகாண்டம் - சர்க்கம் 1 - ஸ்லோகம் #1

ஸ்ரீமத் வால்மிகி ராமாயணம்
பாலகாண்டம் முதல் சர்க்கம்

சர்க்கத்தின் சுருக்கம்:

தம் ஆசிரமத்திற்கு வந்த நாரதரைப் பார்த்து ஆதிகவிகளான வால்மிகி, இந்த உலகத்தில் அனைவரையும்விட உத்தமமானவர் யார்? என்று கேட்டார். அதற்கு பதிலளிக்கும் வகையில் நாரதர், இந்த உலகத்தில் அனைவரையும்விட உத்தமமான புருஷர், அனைத்து நற்குணங்களையும் கொண்டவர், ஸ்ரீராமசந்திரனே என்று பதிலளித்தார். மேலும் சுருக்கமாக மொத்த ராமாயணத்தின் சாரத்தையும் வால்மிகி ரிஷிக்கு உபதேசித்தார். ராமாயணத்தைக் கேட்டால் வரும் நற்பலன்களும் இதில் விளக்கப்பட்டுள்ளது. 

தபஸ்வாத்யாய நிரதம் தபஸ்வீ வாக்விதாம் வரம் |
நாரதம் பரிபப்ரச்ச வால்மீகிர்முனி புங்கவம் ||1||

பொருள்:

தவம் மற்றும் வேத அத்யயனங்களில் நாரதர் விற்பன்னர். வேதங்களின் பொருளை அறிந்தவரில் முதன்மையானவர். முனிவர்களில் சிறந்தவர். இத்தகைய ஞானியான நாரதர் நமது ஆசிரமத்திற்கு வந்ததைக் கண்டு வால்மிகி முனிவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அவரை வரவேற்று மிகுந்த மரியாதையுடன் கேள்விகளைக் கேட்கத் துவங்கினார். 

சிறப்புக் கருத்து:

தமது ஆசிரமத்திற்கு வந்த நாரதரைக் கண்ட வால்மிகி மகரிஷிக்கு மகிழ்ச்சியும் வியப்பும் ஏற்பட்டது. வந்த நாரதருக்கு பூஜைகளைச் செய்து, அவரை இருக்கையில் அமர்த்தி, கேள்விகளைக் கேட்கத் துவங்கினார். அவரது கேள்விகளுக்கு விடையாக நாரதர் ராமாயணத்தை உபதேசிக்கிறார். இப்படி நாரதர் வால்மிகி மகரிஷிக்கு உபதேசித்த ராமாயணத்தை மற்றும் அதன் பாராயணத்தின் பலன்களைப் பற்றி இந்த முதலாம் சர்க்கத்தில் விளக்கப்பட்டிருக்கிறது. 

தபஸ்வாத்யாய நிரதம்: 

1. ’தபஸ்வாத்யாயஸ்ச தப: ஸ்வாத்யாயௌ தப: ஸ்வாத்யாயயோ: நிரதம் தபஸ்வாத்யாய நிரதம்’ என்பது இலக்கணக்குறிப்பு. தவம் மற்றும் படிப்பு (ஞானம்) என்கிற இரண்டிலும் நாரதர் சிறந்தவர் என்று பொருள் கொள்ளவேண்டும். ’ஸ்வாத்யாயோ வேததபயோ:’ என்கிற வேத வாக்கின்படி, ஸ்வாத்யாய என்றால் வேதம் என்றே பொருள். தவம் மற்றும் படிப்பு இவை இரண்டும் மிக முக்கியமானதால், துவக்கத்திலேயே இத்தகைய குணங்களைப் பற்றி விவரிக்கிறார் ஆசிரியர். 

தபோ வித்யாச விப்ரஸ்ச நி:ஸ்ரேயஸகரம் பரம் |
தபஸா கல்மஷம் ஹந்தி வித்யயா ஞானமஸ்னுதே ||

தவம் மற்றும் கல்வி இவ்விரண்டும் பிராமணருக்கு மோட்ச சாதனைக்கான வழிகளாகும். தவத்தினால் மனதில் உள்ள களங்கங்கள் தூர விலகுகின்றன. கல்வியினால் அவன் தத்வஞானி ஆகிறான். 

2. தவம் என்னும் சொல்லிற்கு ஞானம் என்று பொருள். ‘தப ஆலோசனே’ என்னும் வாக்கியத்திலிருந்து வந்த சொல் ஆகையால்; மற்றும் ‘யஸ்ய ஞானமயம் தப:’ என்று வேத வாக்கியம் சொல்வதாலும்; தவம் என்னும் சொல்லிற்கு ஞானம் என்று பொருள் கொள்ளலாம். ஸ்வாத்யாய என்னும் சொல்லிற்கு வேதம் என்று பொருள். ஆகையால், ஞானம் மற்றும் வேத- அத்யயனங்களில் சிறந்தவர் என்னும் பொருள் வருகிறது. 

3. ’தபோ ஹி ஸ்வாத்யாய:’ என்னும் வேத வாக்கியம், வேத அத்யயனமே தவம் என்று சொல்கிறது. ’ஸ்வாத்யாயோ வேத ஜபயோ:’ என்பது போல ஸ்வாத்யாய என்னும் சொல் ஜபம் என்னும் பொருளில் வருகிறது. ஆகையால் ‘ஸ்வாத்யாயாத் மா ப்ரமத:’ (தைத்திரிய உபநிஷத்) ‘வேதமேவ ஜபந்நித்யம்’ என்று சொல்வதைப்போல வேத அத்யயனம் மற்றும் ஜபங்களில் சிறந்தவர் என்று பொருள். 

4. ’தபஸ்வேன ஷ்ருத: ஸ்வாத்யய: தப:ஸ்வாத்யாய:’ வேத அத்யயனத்தையே தவமாகக் கருதி செய்துவருபவர் என்பது இன்னொரு பொருள். முனிபுங்கவ என்று சொன்னதிலேயே, தவம் செய்பவர்களில் முதன்மையானவர் என்று பொருள் வருவதால், இங்கிருக்கும் தவம் என்னும் சொல்லிற்கு, ஸ்வாத்யாயத்தையே தவம் என்று சொல்லவேண்டும். ‘தபஸ்ச ஸ்வாத்யாயஸ்ச தபஸ்வாத்யாயௌ’ என்று இரு சொற்களையும் சேர்த்து பொருள் கொள்ளக்கூடாது. ‘வாக்விவிதாம் வரம்’ வேத அத்யயனங்களைச் செய்துவிட்டு, பிறருக்கு உபதேசம் செய்யாதிருந்தால், அவர் செய்த அத்யயனம் வீணே - என்பது இந்த வாக்கியத்திலிருந்து தெரியவருகிறது. 

யததீதமவிக்ஞாதம் நிகதேன்யைவ ஷப்தைதே |
அனக்னாவிவ ஷுஷ்கைதோ ந தஜ்வலதி கர்ஹிசித் ||

விறகுக்கட்டை உலர்ந்திருந்தாலும், அணைந்துபோன நெருப்பு அதை சுடுவதில்லை. அதுபோல வேதங்களைப் படித்து, அதன் பொருளை அறியாமல் சொற்களை மட்டும் மனப்பாடம் செய்து, அதையே பிறருக்கு உபதேசம் செய்தால் அது சரியான பலனைக் கொடுப்பதில்லை. அத்தகையவர்களிடம் எந்த சக்தியும் இருப்பதில்லை. மேலும், அவர் படித்ததும் வீணே எனலாம். ஆகையால், தமக்குத் தெரிந்ததை மற்றவருக்கு கண்டிப்பாக உபதேசிக்க வேண்டும். இந்த விஷயத்தில் நாரதர் முதன்மையானவர் என்று ’வாக்விதாம் பரம்’ என்ற சொல்லின்மூலம் விளக்குகிறார். வாக் என்றால் வேதம் என்று பொருள். ‘அனாதினிதனா ஹ்யேஷா வாகுத்ஸ்ருட்வா ஸ்யம்புவா’ என்னும் வாக்கியம் வாக் என்னும் சொல்லை வேதம் என்ற பொருளில் சொல்லி, இந்த வேதத்தைக் கற்றுக்கொடுப்பவர் ‘வாக்விதர்’. இவரில் சிறந்தவர் நாரதர். வாக்விதாம் என்பதில் ஆறாம் வேற்றுமைஉருபு வந்து தேவையான பொருளைத் தருகிறது. 

5. வாக் என்னும் சொல்லுக்கு இலக்கணம் என்றும் பொருள் உண்டு. வேதங்களின் ஆறு பகுதிகளையும் நன்று அறிந்தவர்களில் நாரதர் முதன்மையானவர் என்று பொருள் வருகிறது. ஆகையால் நாரதர் ‘வாக்விஷாரதர்’ எனப்படுகிறார். 

முனிபுங்கவம் - 
1. நற்சிந்தனை செய்பவர்களில் நாரதர் சிறந்தவர் என்று பொருள்.
2. முனி என்றால் ஞானி என்று பொருள். அவர்களில் சிறந்தவர் நாரதர்.

தப:ஸ்வாத்யாயநிரதம் என்றால் கேட்டல், வாக்விதாம் என்றால் சிந்தித்தல், முனிபுங்கவம் என்றால் உணர்தல் என்று அறியவேண்டும். கேட்டல், சிந்தித்தல், உணர்தல் ஆகிய மூன்றையும் கற்றுத் தேர்ந்தவர் நாரதர். 

நார என்னும் சொல்லிற்கு ஞானம் மற்றும் அஞ்ஞானம் என்று இரு பொருளும் உண்டு. நாரம் - ஞானத்தைக் கொடுப்பதால் நாரதன் ; நாரம் - அஞ்ஞானத்தைக் கண்டிப்பதால் நாரதன் - என்று இரு விதமாக இவரின் பெயரை விளக்கலாம். 

நாரதம் - நரனுக்கு சம்பந்தப்பட்டவர் நாரதர் - அஞ்ஞானத்தைக் கண்டிப்பவர் ஆகையால் நாரதர். ‘தோ அவகண்டனே’ என்னும் வாக்கியத்தில் தோ என்னும் சொல்லிற்கு நாசம் செய்வது என்று பொருள். மனிதர்களிடம் இருக்கும் அஞ்ஞானத்திற்கு ‘நார’ என்று பெயர். இந்த அஞ்ஞானத்தைப் போக்குவதால் ‘நாரத’ என்று அழைக்கப்பட்டார். 

நாரதர் அஞ்ஞானத்தைப் போக்குகிறார் என்னும் விஷயம், நாரத புராணத்தில் இப்படி சொல்லப்பட்டிருக்கிறது. 

காயன் நாராயணகதாம் சதா மாயபயாபஹாம் |
நாரதோ நாஷயன்னேதி ந்ருணாம் அஞ்ஞானஜம் தம: ||

அஞ்ஞானம் மற்றும் பயங்களைப் போக்கும் நாராயணனின் கதையை எந்நேரமும் பாடியவாறும், மனிதனின் அஞ்ஞானத்தால் வரும் பாவங்களைப் போக்கியும், நாரதன் என்னும் தன் பெயருக்கு ஏற்ப நடந்துகொண்டார். 

இங்கு கவனிக்கவேண்டிய விஷயம்:

‘தம் யதா யதா உபாசதே ததேவ பவதி’ என்கிற உபநிஷத்தின் வாக்கியத்தின்படி, நாரதர், ஸ்ரீஹரியை அஞ்ஞானம் மற்றும் பயங்களைப் போக்குபவர் என்று வேண்டுகிறார். ஆகையால், அவருக்கும் மனிதர்களிடம் இருக்கும் அஞ்ஞானம் மற்றும் பயங்களைப் போக்கும் திறன், ஸ்ரீஹரியிடமிருந்து வந்தது. 

மனிதர்களுக்கு சம்பந்தப்பட்ட ஞானத்திற்கு நார என்று பெயர். அந்த ஞானத்தை ததாதி - கொடுப்பதால் நாரதர் என்று பெயர் பெற்றார். ஆகையால், நாரதர் அனைவருக்கும் குருவாக இருக்கிறார். 

3. மகாபாரதத்தில் வேதவியாசர் கூறியதாவது:

நரதீதி நர: ப்ரோக்த: பரமாத்ம சனாதன: |
ச ஏவ நார; தம் ததாதீத்யுபதிஷதீதி நாரதஸ்தம் ||

நரதி - என்றால் நற்கதியைக் கொடுக்கிறார் என்று பொருள். ஆகையால் ஸ்ரீஹரிக்கு நர என்று பொருள். 
நர ஏவ நார; ஆகையால் நார: என்றால் ஸ்ரீஹரி என்று பொருள். 
தம் ததாதி உபதிஷதி - அவரைப் பற்றி உபதேசம் செய்வதன் மூலம் அவரை அறிமுகப்படுத்துகிறார். 
ஆகையால், நாரத என்று நாரதர் பெயர் பெற்றார். 

‘நரதி சத்கதிம் ப்ராபயதி இதி நாரத:’ நற்கதியைக் கொடுப்பவராகையால் நாரத என்று பெயர்.

1. தபஸ்வி - சிஷ்யரான வால்மீகியின் லட்சணங்களை இந்தச் சொல் விளக்குகிறது. ’தப: அஸ்ய அஸ்தீதி தபஸ்வீ’ என்பது இலக்கணக் குறிப்பு. சிறந்த தவங்களைச் செய்தவர் என்று பொருள் வருகிறது. 

2. முக்கியமான மற்றும் இதர தவங்கள் என அனைத்தையுமே செய்தவர் என்று அடுத்த பொருள். ‘மனசஸ்சேந்திரியாணஸ்ச ஏகாக்ரம் பரமம் தப:’ என்று சொல்வதைப் போல மனம் மற்றும் இந்திரியங்களை ஒருமைப்படுத்துவதே (கட்டுப்படுத்துவதே) சிறந்த தவம் ஆகும். க்ருச்ர சாந்த்ராயண ஏகாதசி உபவாசம் ஆகியவற்றைச் செய்வதே முக்கியமான தவம் ஆகும். இவ்விரண்டு தவங்களையும் செய்தவர் என்று பொருள். 

வால்மீக: - வல்மீகஸ்ய அபத்யம் வால்மீகி: என்பது இலக்கணம். புற்றிலிருந்து பிறந்ததால் இவருக்கு வால்மிகி என்று பெயர் வந்தது. வால்மிகி, ப்ருகு ரிஷியின் மகன் என்று விஷ்ணுபுராணம் சொல்கிறது. ‘புத்ரோபூத் பார்கவஸ்தஸ்மாத் வால்மீகிர்யோபிதீயதே’ என்று உள்ளது. ராமாயணத்திலும்கூட ’பார்கவேணேதி சம்ஸ்க்ருதௌ பார்கவேண தபஸ்வினா’ என்று ப்ருகுவின் மகன் என்று வருகிறது. இன்னொரு இடத்தில் ‘சக்ரே ப்ரசேதஸ: புத்ரஸ்தம் பிரம்ஹாப்யன்வமன்யதே’ என்று பிரசேதசரின் மகன் என்கின்றனர். ‘வேத: ப்ராசேதஸாதாசீத்’ என்னும் வாக்கியம்கூட இதற்கு ஆதாரமாக உள்ளது. இப்படியிருக்கும்போது, புற்றிலிருந்து பிறந்தார் என்று ஏன் சொல்லவேண்டும்? இந்தக் கேள்விக்கான பதிலை இப்படி சொல்லலாம். 

ப்ரசேதசன் என்று அழைக்கப்படும் வருணன், மழையைப் பொழிந்து புற்றிலிருந்து மேலெழுந்து வருமாறு செய்தார். ஆகையால் ப்ரசேதனின் மகன் என்பதற்கும், புற்றிலிருந்து பிறந்தார் என்பதற்கும் வேறுபாடு இல்லை என்று சொல்லலாம். மேலும் ப்ருகு ரிஷிகளின் மூலம் பிறந்ததால் ப்ருகுவின் மகனானார் என்றும் சொல்ல வேண்டும். 

இப்படி வால்மிகி என்னும் பெயரிலிருந்தே வால்மிகி மகரிஷிக்கு சம, தம ஆகிய நற்குணங்கள் இருந்தன என்று தெரியவருகிறது. ஆகையால், ராமாயண உபதேசத்திற்கு வால்மிகி மகரிஷியானவர் தகுதி பெற்றிருந்தார் என்றும் அறியலாம். 

’பரிபப்ரச்ச’ - மிகுந்த மரியாதையுடன் கேள்விகளைக் கேட்டார் என்று பொருள். ‘தத் விக்ஞானார்த்தம் ஸ குருமேவ அபிகச்சேத்’ என்று சொன்னதால், விதிமுறைப்படி நாரதரை, குருவாக வரித்து அவரை அழைத்து, கேள்வி கேட்டார் என்று பொருள். 

***

ಬಾಲ ಕಾಂಡ ಸರ್ಗ 1 ಸ್ಲೋಕ 5&6

ನನ್ನ ಈ ಪ್ರಶ್ನೆಗಳಿಗೆ ಉತ್ತರಿಸಲು ತಾವೊಬ್ಬರೇ ಸಮರ್ಥರು ಏತದಿಚ್ಛಾಮ್ಯಹಂ ಶ್ರೋತುಂ ಪರಂ ಕೌತೂಹಲಂ ಹಿ ಮೇ   | ಮಹರ್ಷೇ ತ್ವಂ ಸಮರ್ಥೋ ಽ ಸಿ ಜ್ಞಾತ...